நித்யானந்தா மீது ஏற்கனவே கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது, இதை நிரூபிக்க நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த கோர்ட் உத்தரவிட்டது, இன்று நடைபெற்ற ஆண்மை பரிசோதனை காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்த்து வாதிட்ட நித்யானந்தா தனக்கு குழந்தை போன்ற உடல்தான் இருப்பதாகவும் தன்னால் 'எழுச்சி'யுடன் செயல்பட முடியாது என்றும் கூறினார், இதையடுத்து கோர்ட்டு நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது, ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ஐகோர்ட்டில் நித்தியானந்தா தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், நித்தியானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம்தேதி, ஆண்மை பரிசோதனை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தடை கோரி, நித்தியானந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றமும் நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
இன்று பெங்களூரிலுள்ள விக்டோரியா அரசு பொது மருத்துவமனைக்கு ஆண்மை பரிசோதனைக்கு வந்த நித்யானந்தா சிஷ்யர்கள் புடைசூழ வந்திருந்தார், வழக்கம் போல பெண் சிஷ்யர்கள் வெள்ளை சேலையும், ஆண் சிஷ்யர்கள் காவி உடையும் அணிந்திருந்தனர். நித்தியானந்தாவும் காவி உடையுடனே மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்தியது. காலை 7.45 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நித்தியானந்தாவுக்கு மாலை வரையில் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.
நாடே டிவியில் பார்த்த விஷயத்துக்கு பரிசோதனையா?
Post a Comment