BREAKING NEWS

Sports

Health

sex

Thursday 11 September 2014

கேரளாவில் பார்களை மூட செப்.30 வரை அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை


கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான  ஓட்டல்களில் இயங்கி வரும் பாருடன் கூடிய மது விற்பனை கடைகளை மூடும் கேரள அரசின் உத்தரவுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி அனில் ஆர்.தவே, "மதுபான விடுதிகளின் தடையின் பின்னணியில் எவ்விதமான அர்த்தமு இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது, அப்படியிருந்தும் எனக்கும்கூட கேரள அரசின் இந்த முடிவில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்களை மூட காரணம் தரமில்லை என்கின்றனர். ஆனால் தரம் என்றும் தரமற்றது என்றும் எப்படி வேறுபடுத்துகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை அரசின் மீது எழுப்பினர். இதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறது அரசு? மதுபானத்திற்குத் தடையையா? இல்லை. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும், கள்ளுக்கடைகள் இயங்கும், ஆனால் சில பார்கள் மட்டும் இயங்க முடியாது என்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்கள்

பார்களை மூட 30ம் தேதி வரை தடைவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே மற்றும் நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரள மது விற்பனை ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிரான மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 30-ல் கேரள உயர் நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger