BREAKING NEWS

Sports

Health

sex

India

World News

Tamil Nadu

Sex Health

cinema

Saturday 3 September 2016

How to tighten the loose and sagging breasts

How to tighten the loose and sagging breasts


Saggy or loose breast and losing tightness of breasts tissues and glands can be caused by lose weight fast, breast feeding, use of birth control pills for a long time, low calorie diet and age. Loose breast can make your appearance older. Naturally our breast made with fatty tissues and glands, muscles can be found under the breast. You can make tighten or firm these muscles with some exercises or massage but to tighten tissues and glands you must consider recovering some useful natural home remedies for a beautiful and attractive figure with lifted or sagging breast.

How to Grow Your Hair Fast – Indian Hair Growth Secrets

How to Grow Your Hair Fast – Indian Hair Growth Secrets

People have always asked me how I end up having such long hair in such a short span of time. Well, I wish I could say it was plain genetics, but honestly, it is more about this little oil and aloe vera treatment mixed with some vitamin E, castor oil and coconut oil. I learn this method and massage treatment from mom at a very young age, and I have to say that this is one of the biggest reasons why my hair is the way it is today! As an Indian I have learnt lots of ancient Indian hair care secrets from the previous generations, and this one is one of my favorites in my whole routine. Hence this tutorial today, hope you like it!

Sunday 12 April 2015

மாணவனுடன் ஆசிரியை மாயம் ; பேஸ் புக்- வாட்ஸ் அப்பில் பர..பர..

திருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாணவனும், ஆசிரியையும் ஒரே நேரத்தில் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களை குறித்து தவறான படங்களும், கேலி பேச்சுக்களும் பேஸ்புக், வாட்ஸ் அப்களில் உலா வந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. நெட் நண்பர்கள் பலரும் இந்த சம்பவத்தையே பேசி வருகின்றனர். ' இது செம்மரக்கடத்தல் ' என்பது அதில் ஒரு கமென்ட்.
திருநெல்வேலி, செங்கோட்டை, காலங்கரை பகுதியை சேர்ந்த இளம் ஆசிரியை ( வயது 24 ) . எம்.எஸ்.சி.,பட்டதாரி. செங்கோட்டையை அடுத்துள்ள, இலத்தூரில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நாளில் பள்ளிக்கு சென்ற ஆசிரியை காணவில்லை என அவரது தந்தை , செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவன் ( வயது 16 ) , கடையநல்லூர், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்த மாணவனையும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்த தினத்தில் காணவில்லை என அவரது தாயார் கடையநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இருவரும் காணாமல் போனது குறித்து செங்கோட்டை, கடையநல்லூர் போலீசார் விசாரித்துவருகின்றனர். மாணவன் வீட்டில் இருந்த ரொக்கப்பணம், நகைகளுடன் தலைமறைவாகியிருக்கலாம் என தெரிகிறது. ஒரே நேரத்தில் ஆசிரியையும், மாணவனும் கிளம்பி சென்றதால் இருவருக்கும் காதல் எனவும் ஒருவரை மற்றவர் கடத்திச்சென்றுவிட்டதாக பரபரப்புஎழுந்துள்ளது. ஆனால் இருவரும் சேர்ந்து சென்றதை யாரும் பார்த்ததாக தகவல் இல்லை.



வாட்ஸ்அப் படங்கள்: காணாமல் போன ஆசிரியை , மாணவன் ஆகியோரது படங்கள் போலீசாரிடம் உள்ளது. ஆனால் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய ஒரு படத்தில், ஒரு மாணவன், ஒரு ஆசிரியை வகுப்பறையிலேயே தூக்கிவைத்திருப்பது போன்ற காட்சி உள்ளது. அந்த ஆசிரியையின் படங்களும் வெளியாகின. இந்த பரபரப்பு முடிவதற்குள், இன்று காலையில் இதே ஆசிரியை, மாணவன் குறித்து புதிய அதிர்ச்சியூட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.


மாணவன் காயத்துடன் சிகிச்சை பெறுவது போல ஒரு படமும், ஒரு இரும்பு பெட்டிக்குள் கால்கள் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது போலவும் படங்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஆசிரியையும் இரும்புபெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்களும் வாட்ஸ்அப்களில் பரப்பப்படுகிறது.



ஆனால் காணாமல் போன ஆசிரியை , மாணவன் , இவர்கள் அல்ல என தெளிவாக தெரிகிறது. இருப்பினும் ஊர்வாயை மூட முடியாது என்பதைப்போல வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் தங்களுக்கு தெரிந்த கட்டுக்கதைகளை பரப்பிவிடுகின்றனர். இருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கும் படங்கள் அரியானாவில், சோனிபட் மாவட்டத்தில் உள்ள பகல்கர்ட் என்ற நகரின் பூங்கா ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள் என தௌிவாக தெரியவருகிறது. 

Thursday 26 March 2015

“மோதினால் பெரிய நாடே அழியும்” 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் ராட்சத விண்கல்

வாஷிங்டன்,

1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் நாளை வெள்ளிக்கிழமை பூமிக்கு மிகஅருகில் கடக்க உள்ளதாக அமெரிக்காவின் நாசா வின்வெளி ஆராய்ச்சி நிலைய ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ராட்சத விண்கல்லானது மணிக்கு 37000 கி.மீ. வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

'2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள விண்கல்லானது, பூமியை நெருங்க 4,473,807 கிலோ மீட்டர்களை கடந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  37 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பாய்ந்து வரும் இந்த விண்கல்லானது, பூமியின் மீது மோதினால் ஒரு நாட்டையே அழித்துவிடக் கூடிய அளவுக்கு ஆபத்தானதாக  இருக்கும் என்று கூறப்படுகிறது. மிகவும் நெருக்கமாக வரும் இந்த விண்கல் பூமியின் மீது மோதினால், பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.  

1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் மோதினால் மிகப்பெரிய பாதிப்பு இருக்கும். கடந்த 1908ம் ஆண்டு சைபீரியாவின் துங்குஸ்காவில் விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சைபீரியாவில் விண்கல் மோதியது இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் அப்போது உணரப்பட்டது. விண்கல் மோதியபோது 80 மில்லியன் மரங்கள் அழிந்தது, சுமார் 5.0 அளவில் அதிர்வு காணப்பட்டது. துங்குஸ்காவில் விழுந்த விண்கல் 50 மீட்டர் ஆழத்துக்குப் பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது. இதைவிட '2014 ஒய்.பி.35' விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பக்கிங்ஹாம்ஷைர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பில்நேப்பியர் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “துங்குஸ்கா போன்ற நிகழ்வுகள் எல்லாம் சிறியதுதான், பதிப்பு உண்மையில் மிகவும் ஆபத்தானது. அப்போது நாம் இதுபோன்ற விண்கல்களை அடையாளம் கண்டுக் கொள்ளவில்லை. எனவே நாம் பாதிப்பை சம்மாளிக்க தயார்படுத்திக் கொள்ளாமல் இருந்தோம். ஆனால் ‘2014 ஒய்.பி.35' போன்ற விண்கற்கள் உலக அளவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் நிகழ்வுகளை தடுக்கவும் ஏதோ ஒன்று உள்ளது. விண்கற்கள் பூமியில் மோதுவது என்பது ஒரு அரிதான நிகழ்வுதான். இருப்பினும், விண்கற்கள் ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக நினைத்துவிட முடியாது.”  என்றார். 

பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விண்கற்கள், மிகவும் அருகே வரும்நிலையில் எச்சரிக்கையை ஏற்படுத்துகிறது. ஆனால், பூமிக்கு அருகே விண்கற்கள் வருகிறது என்பது, பூமிக்கு பாதிப்பு ஏற்படுத்துவது என்று பொருள் ஆகாது, பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய போன்ற எச்சரிக்கை உள்ளது என்பதே பொருள் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்கற்கள் பூமியை நெருங்கி செல்வது என்பது வழக்கமான ஒன்றாகும். 

Saturday 29 November 2014

குழந்தைகளுக்கு பயனளிக்கும்  இணையதள பக்கங்கள்!

ணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..


Kids Health 

மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. ‘ஆஸ்துமா என்றால் என்ன?’, ‘நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?’, ‘வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?’ என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும். 

மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம். இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/

National Geographic Kids 

அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.
வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி:  http://kids.nationalgeographic.com/kids/.  

Kidsmart

இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.
சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/. 


Friday 28 November 2014

அரக்கோணம்-சென்னை கடற்கரை ரயில்கள் வேளச்சேரி வரை நீட்டிப்பு .


சென்னையில் புதிய மின்சார ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரக்கோணம்-சென்னை கடற்கரை, சூளூர்பேட்டை-சென்னை கடற்கரை மின்சார ரயில்கள் இனி வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சேவை இன்று முதல் தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளச்சேரி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள்...

ரயில் எண் 42750: பொன்னேரி - சென்னை கடற்கரை- காலை 7 மணி

ரயில் எண் 43650: ஆவடி - சென்னை கடற்கரை- காலை 7.30 மணி

ரயில் எண் 43932: அரக்கோணம் - சென்னை கடற்கரை- காலை 7

ரயில் எண் 42850: சூளூர்பேட்டை - சென்னை கடற்கரை- காலை 7.25

வேளச்சேரியில் இருந்து திருத்தணி, அரக்கோணம், ஆவடி வரை செல்லும் ரயில்கள்...

ரயில் எண் 43941: காலை 11.20 -வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் திருத்தணிக்கு பிற்பகல் 2.40 மணிக்கு சென்றடையும்.

ரயில் எண் 43931: மாலை 5.15 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் அரக்கோணம் இரவு 8.05 மணிக்குச் சென்றடையும்.



ரயில் எண் 43651: இரவு 7.30 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 8.10 மணிக்கு ஆவடி சென்றடையும்.

ரயில் எண் 41126: இரவு 8.50 மணிக்குப் புறப்படும் வேளச்சேரி - சென்னை கடற்கரை ரயில் இரவு 10.30 மணிக்கு ஆவடி சென்றடையும்.

வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்படும் ரயில்கள்...

ரயில் எண் 41027: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.15 மணி

ரயில் எண் 41031: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 8.35 மணி

ரயில் எண் 41037: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.05 மணி

ரயில் எண் 41047: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 9.55 மணி

ரயில் எண் 41052: சென்னை கடற்கரை - வேளச்சேரி காலை 11.15 மணி

ரயில் எண் 41118: சென்னை கடற்கரை - வேளச்சேரி இரவு 7.30 மணி

ரயில் எண் 41126: வேளச்சேரி - சென்னை கடற்கரை இரவு 8.50 மணி

Tuesday 25 November 2014

நம் முன்னோர்களின் அறிவாற்றல் - இதுதான் சிதம்பர ரகசியமா???



கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது தெரியாது   - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ?

எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....

 அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்க ு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..

அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள்...

அறிவியல் ,பொறியியல்,புவி யியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....

(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது,

இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவிய ியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது , இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்" மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் மானுடராக்கை வடிவு சதாசிவம் மானுடராக்கை வடிவு திருக்கூத்தே என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள் ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது



Related keywords: Tamil news, chidambaram, secret, news updates, tamil history, tamilnadu temples.
 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger