BREAKING NEWS

Sports

Health

sex

Monday 8 September 2014

கடைசி ஓவரில் தோனியின் சுயநலத்தால் தோற்ற இந்தியா - 3 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி


இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையான நிலையில் இந்தியா 13 ரன்கள் மட்டுமே எடுக்க எடுத்தது. எளிதாக கிடைக்க வேண்டிய இரண்டு ரன்களை தோனி எடுக்காமல் தானே ஆடி வெற்றி பெற நினைத்ததே இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 181 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி ஆடியதில் கடைசி இரண்டு ஓவர்களில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராயுடும், தோனியும் மட்டையடித்துக்கொண்டிருந்தனர்,
19 வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது, கடைசி ஓவரில் 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி 20 வது ஓவரை சந்தித்தார். முதல் பந்திலேயே தோனி சிக்சர் அடித்தார், 5 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு ரன்கள் எடுத்தார் தோனி,  இதை அடுத்து 4 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது, அடுத்த பந்தில் தோனி அடித்ததில் ஒரு ரன் வந்திருக்க வேண்டியது, ராயுடு அடுத்த முனையில் இருந்து ஓடிவர முயன்ற போது தோனி ராயுடுவை ரன் ஓட வேண்டாம் என நிறுத்தினார்.

4வது பந்தை பவுண்டரிக்கு அடித்தார் தோனி, கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை அடித்தார் தோனி, இந்த பந்திலும் எளிதாக ஒரு ரன் எடுக்கலாம், இதிலும் பாதி தூரம் ஓடி வந்த ராயுடுவை தடுத்து வேண்டாம் என்று அனுப்பினார் தோனி. கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தோனியால் 1 ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

கடந்த ஒருநாள் தொடரில் ராயுடு, சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார், கடைசி ஓவரில் அவரை ஆட விடாமல் தோனியே அனைத்து பந்துகளையும் எதிர்கொண்டு இரண்டு ரன்கள் எடுக்கும் வாய்ப்பையும் இழந்து மேட்சையும் தோற்றது கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger