6–வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா)– லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் இடையிலான ஆட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியது. தொடர்ந்து மழை கொட்டியதால் டாஸ் கூட போடப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக்கில் நாளை பெர்த் ஸ்கார்ச்சர்சை, மழை மிரட்டல் உள்ள இதே பெங்களூரில் சந்திக்க உள்ளது. அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் சென்னை அணி கட்டாயம் வென்றாக வேண்டும்.
Post a Comment