BREAKING NEWS

Sports

Health

sex

Wednesday 10 September 2014

கேரள அரசின் பாரை மூடும் மதுவிலக்கு கொள்கையில் அர்த்தமில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

கேரளாவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்த அந்த மாநில அரசு முதல்கட்டமாக  "பார்"களை மூட உத்தரவிட்டது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் மட்டும் ‘பார்’ நடத்த அனுமதிக்கப்படும் எனக் கூறியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து 'பார்' உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி அனில் ஆர்.தவே, "மதுபான விடுதிகளின் தடையின் பின்னணியில் எவ்விதமான அர்த்தமு இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது, அப்படியிருந்தும் எனக்கும்கூட கேரள அரசின் இந்த முடிவில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்களை மூட காரணம் தரமில்லை என்கின்றனர். ஆனால் தரம் என்றும் தரமற்றது என்றும் எப்படி வேறுபடுத்துகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை அரசின் மீது எழுப்பினர். இதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறது அரசு? மதுபானத்திற்குத் தடையையா? இல்லை. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும், கள்ளுக்கடைகள் இயங்கும், ஆனால் சில பார்கள் மட்டும் இயங்க முடியாது என்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்கள்

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger