விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த தடையை 2 ஆண்டுக்கு ஒருமுறை நீட்டித்து வருகிறது.
இதற்காக பொது மக்களிடம் கருத்து கேட்கப்படுவது வழக்கம்.
அதே போல் இப்போதும் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.பி. மிட்டல் தலைமையில் அமைந்துள்ள சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயத்தின் விசாரணை ராஜா அண்ணாமலைபுரம் எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் அரங்கில் இன்று நடைபெற்றது.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரது விளக்கம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டது. இதே போல் அங்கு விசாரணையில் பலர் ஆஜரானார்கள்.
Post a Comment