BREAKING NEWS

Sports

Health

sex

Monday 17 November 2014

வண்டலூர்: தப்பியோடிய புலி சிக்கியது


கடந்து நான்கு நாட்களாக போக்கு காட்டிய நேத்ரா புலி இன்று பிடிபட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலிகள் பராமரிக்கப்பட்டு வந்த பகுதியில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் நேத்ரா உட்பட 5 புலிகள் தப்பியோடின. உடனே வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு 4 புலிகளை பிடித்தனர். ஆனால் அதில் நேத்ரா புலி மட்டும் பிடிபடவில்லை. இது வனத்துறையினருக்கு பெரிய தலைவலியாக இருந்தது.
இந்நிலையில் இன்று நேத்ரா புலியையும் ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். கூண்டிற்குள் வைத்திருந்த இறைச்சியை சாப்பிட வந்த போது புலி சிக்கியது. கடந்து நான்கு நாட்களாக போக்கு காட்டிய நேத்ரா புலி இன்று பிடிபட்டதை தொடர்ந்து ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சிவிட்டனர்.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger