BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 27 September 2014

முருகதாஸ்க்கு பிறந்தநாளன்று மகிழ்ச்சியை கொடுத்த கத்தி படத் தீர்ப்பு!

விஜய்-சமந்தா நடிப்பில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிற ‘கத்தி’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தை லைக்கா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை என்னுடையது என்று கோபி என்பவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதனால், இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகுமோ என்ற அச்சம் நிலவிக் கொண்டிருந்த வேளையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘கத்தி’ படத்தின் கதைக்கும் கோபி என்பவருடைய கதைக்கும் எந்த ஆதாரமும் சரியாக இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். இதோடு கத்தியின் கதை சம்பந்தமான பிரச்சினையில் இருந்து விடுதலை பெற்றுள்ளது படக்குழு.
இந்த தீர்ப்பு படக்குழுவினருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அதுவும் நேற்று முருகதாசின் பிறந்தநாளன்று வெளிவந்த இந்த தீர்ப்பு அவருக்கு மேலும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger