BREAKING NEWS

Sports

Health

sex

Saturday 27 September 2014

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சசிகலாவுக்கு ஜோதிடம் கூறவில்லை : டி.ராஜேந்தர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து சசிகலாவுக்கு ஜோதிடம் கூறவில்லை என்று நடிகர் டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாரம் இருமுறை வெளியாகும் ஒரு அரசியல் பத்திரிகையில் (செப் 24 – 26 இதழில்) மதிப்பிற்குரிய சின்ன மேடம் சசிகலாவுக்கு டி.ராஜேந்தர் சொன்ன ஜோதிடம் என்ற தலைப்பில் இரண்டு பக்கக் கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். அதிலே… சின்ன மேடம் சசிகலாவை டி.ராஜேந்தர் பத்து தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார் என்று தொடங்கி, ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.
 அவர்கள் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல, நான் எந்த நட்சத்திர ஓட்டலிலும் மதிப்பிற்குரிய சின்ன மேடம் சசிகலா அவர்களைச் சந்திக்கவும் இல்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு 27ம் தேதி வர இருப்பதாகக் கூறப்படும் தீர்ப்பு குறித்து எந்த விதமான ஜோதிடமும் சொல்லவுமில்லை.
ஆண்டவன் அருள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, எந்தக் கருத்தையும் அனுமானங்களையும் சொல்லக் கூடாது என்ற அடிப்படை ஞானத்தை ஆண்டவன் அருளால் பெற்றதால், அது பற்றி நான் சொல்லவில்லை. இது எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியம். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், அப்படியே ஒரு வேளை நான் அவர்களைச் சந்தித்து இருந்தால், ஆமாம் சந்தித்தேன்… என்று உண்மையை மறைக்காமல் ஒத்துக்கக் கூடியவன் என்பதே உண்மை.
நான் மதிப்பிற்குரிய முதல்வர் அம்மா அவர்கள் மீதும், சின்ன மேடம் அவர்கள் மீதும் மரியாதை உள்ளவன். அவர்களுக்குப் பரிச்சயமானவன் மட்டுமல்ல, பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமானவன் என்பதை இந்த அறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.

Post a Comment

 
Copyright © 2013 Tamil News updates
Share on Blogger Template Free Download. Powered byBlogger